Pages

Saturday, December 7, 2013

                                                     Kithursanan

Monday, October 7, 2013



கோழிக்கறியும் குதிரைக்கறியும்
ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது. உடனே சர்வரை அழைத்து, இது கோழிக்கறி மாதிரி தெரியவில்லையே... இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது போல் தெரிகிறதே... என்றான். சர்வர் முதலில் மழுப்பினான். அதட்டிக் கேட்டதும், ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம் என்றான்.
எவ்வளவு கலப்பீர்கள்? என்று சர்வரின் சட்டையைப் பிடித்தான் அவன்.
சம அளவு சார்! என்றான் சர்வர்.
சம அளவுன்னா... எவ்வளவுடா... என்றான் அவன். சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு?
சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த அளவில்தான் கலப்போம் என்றான் சர்வர்.அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்.

Saturday, October 5, 2013

வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கு தண்டுப் பகுதியில் தக்காளிப்பழம்




வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கு களையும் தண்டுப் பகுதியில் தக்காளிப் பழங்களையும் கொண்டுள்ள விசித்திர தாவரமொன்று பிரித்தானியாவில் முதல் தடவையாக செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

டொம்டரோ என்ற மேற்படி தாவரம் ஒவ்வொன்றும் அதனது வேர் பகுதியில் உருளைக்கிழங்குகளையும் தண்டுப் பகுதியில் 500க்கு மேற்பட்ட தக்காளிப் பழங்களையும் கொண்டுள்ளது.
தாவரங்கள் தொடர்பான நீண்ட கால மரபணு பரிசோதனைக ளையடுத்தே இந்தத் தாவரம் விருத்தி செய்யப்ப ட்டுள்ளது.


Wednesday, August 21, 2013






 
 
நடிகர் சூர்யா முதல் முதலாக பாடியுள்ள பாடலொன்று இணையத்தளத்தில் வெளிவந்து இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

கொஞ்சும் காலையில் கண்கள் திறந்ததுமே.." எனத் தொடங்கும் இந்தப் பாடலுக்கு பாடகர் கார்த்திக் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் இப் பாடலானது ஒரு விளம்பரத்திலேயே இடம்பெறப்போகின்றது.
சூர்யா பாடும் பாடலின் வீடியோ காட்சியை கார்த்திக் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.